Thursday, 6 October 2011

கோட்டைத் தாண்டு


முருகய்யன் வீடு அவனது தேவையைவிடச் சற்றுப் பெரியது. அதனால் அவன் தன் வீட்டின் முன் பக்க அறையை சேகர் என்ற இளை ஞனுக்குச் சொற்ப வாடகையில் கொடுத்திருந்தான். சேகர் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். ஒரு கடையில் வேலை செய்து மாதச் சம் பளம் பெற்று வருபவன். அவனுக்குக் கிடைத்த சம்பளப் பணம் அவனுக் குப் போதும் போதாததுமாகத்தான் இருந்தது. எப்படியோ ஒரு வேளை, அரை வேளை எனச் சாப்பிட்டு நாட் களைக் கழித்துக் கொண்டிருந்தான்.

முருகய்யனும் அவன் மீது பரி தாபப்பட்டு அவ்வப்போது சேகருக்கு உணவு அளித்தும் சிறு உதவிகளை செய்தும் வரலானான். இதைக் கண்ட முருகய்யனின் மாமா பொன்னய்யன், "இதோ பார் முருகய்யா! நீ இப்படியே சேகருக்கு உதவி செய்து கொண்டே இருந்தால் அவனுக்கு இன்னமும் அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றாது. நாளடைவில் எதற்கும் உன்னையே எதிர்பார்த்து முழுச் சோம்பேறியாக ஆகிவிடுவான். அதனால் நீ அவ னுக்கு இனிமேல் உதவாதே!" என்று கூறினான்.

முருகய்யன் தன் மாமனிடம் மிகவும் மதிப்பு வைத்திருந்தான். ஏனெனில் அவனைப் படிக்க வைத்து வாழ்க்கையில் முன்னேறச் செய்த வனே அவனது மாமா பொன்னய்யன் தான். எனவே அவன் தன் மாமா கூறியதை மௌனமாகக் கேட்டுக் கொண்டான்.

இப்படி இருக்கையில் ஒருநாள் பொன்னய்யன் தன் நண்பனின் வீட் டுத் திருமணத்தில் கலந்து கொள்ள வெளியூர் சென்றான். முருகய்யனும் ஏதோ வேலையாக ஊருக்குள் போய் விட்டு மாலையில் தான் தன் வீட் டிற்கு வந்தான்.

அப்போது சேகரின் அறையில் இருந்து அவன் முனகும் சத்தத்தைக் கேட்டு முருகய்யன் அந்த அறைக்குள் சென்றான்.
அங்கு சேகர் நன்கு போர்த்திக் கொண்டு பாயில் படுத்திருப்பதை அவன் கண்டான். அவன் முக்கி முனகி ‘அம்மா’ ‘அம்மா’ என்று அரற்றுவதைக் கேட்டு முருகய்யன் அவனருகே போய் "சேகர்! என்ன வேண்டும்?" என்று கேட்டான். சேக ரும் "காய்ச்சலாக இருக்கிறது. எது வும் வேண்டாம். ஓரிரு நாட்களில் சரியாகிவிடும்," என்றான்.

முருகய்யன் அப்போதே அவ னுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்து உதவலாமா என்று எண்ணினான். ஆனால் அடுத்த விநாடியே மாமன் பொன்னய்யன் செய்த எச்சரிக்கை நினைவிற்கு வந்தது. எனவே சேக ரிடம், "சரி. உன் இஷ்டம் போலவே செய்!" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.

மூன்று நாட்கள் கழிந்தன. அப் போதும் சேகரின் உடல்நிலை திருந்த வில்லை. நான்காவது நாள் சேகர் வேலை செய்யும் கடையின் சொந்தக் காரர் சொக்கலிங்கம் அவனைப் பற்றி விசாரிக்க அவனது அறைக்கு வந்தார். அங்கு சேகர் படுத்திருப்பதைப் பார்த் துப் பதறிப் போய், அவர் அவனது உடலைத் தொட்டுப் பார்த்து முருகய் யனிடம், "நல்ல ஆளய்யா நீர்! ஒரு மனிதன் உயிர் போகும் நிலையில் இருக்கும் போது அவனைக் காப் பாற்ற வேண்டாமா? நான் சேகரை அழைத்துக் கொண்டு போய் வைத் தியரிடம் காட்டுகிறேன்," எனக் கூறி சேகரை எழுப்பி கைத்தாங்கலாக நடத்திக் கூட்டிக் கொண்டு சென்றார்.

அதே சமயம் ஊர் திரும்பிய பொன்னய்யன் சேகரை சொக்க லிங்கம் கூட்டிக் கொண்டு போவ தைப் பார்த்துவிட்டு, முருகய்யனி டம் என்ன விஷயம் என்று கேட் டான். முருகய்யனும் நடந்ததைக் கூறவே, பொன்னய்யனும் "அறி வுரைகளைப் புரிந்து கொண்டு சந் தர்ப்பத்திற்கு ஏற்ப செயல்பட வேண் டும்.

அப்படி நீ நடந்து கொள்ளாதது உன் தவறே. இனியாவது புரிந்து கொண்டு நட!" என்றான். முருகய் யனுக்கும் இனி தான் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது புரிந்தது!

No comments:

Post a Comment