Saturday, 4 August 2012

தினம் ஒரு முட்டை


தினம் ஒரு முட்டையினை சாப்பிடுவது நம்முடைய உடலிற்கு நல்லது.குறைந்த செலவில், அதிக சத்துகள் நிறைபிய ஒரு உணவு முட்டை.
காலை நேரத்தில் சிற்றுண்டியாக, 2 முட்டையினை சாப்பிடுவதால், நம்முடைய உடலிற்கு 14 கிராம் அதிக சத்துகள் நிரம்பிய புரோட்டின் , 12 கிராம் கொழுப்பு ,1 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 13 விதமான மினரல் & விட்டமின்ஸ் கிடைக்கின்றது.

பொதுவாக ஒரு பெரிய முட்டையில் 80 கலோரிஸ் இருக்கின்றது, இதில் 60 கலோரிஸ் முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கின்றது. மீது 20 கலோரிகள் தான் வெள்ளை கருவில் இருக்கின்றது. அதனால் உடல் பருமனாக இருப்பவர்கள், வயதனவர்கள் வெள்ளை கருவினை மட்டும் சாப்பிடுவது உடலிற்கு நல்லது.

முட்டையின் மஞ்சள் கருவில் அதிக அளவு கொலஸ்ட்ரால் இருக்கின்றது. ஆனாலும் இந்த கொலஸ்ட்ரால் நம்முடைய கொலஸ்ட்ரால் அளவினை அதிகப்படுத்துவதில்லை. ஆனாலும் அளவோடு சாப்பிடுவது நல்லது.

ஒரு நாளைக்கு நமக்கு 300 கொலஸ்ட்ரால்  நம்முடைய உடலிற்கு தேவைப்படுகின்றது. ஒரு முட்டையின மஞ்சள் கருவில் சுமார் 275 இருக்கின்றது. தினமும் முட்டையினை சாப்பிடுவதால் இதய நோய் வருவதற்கான வாய்புகள் குறைவாக இருப்பதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கபட்டுள்ளது.

தினமும் காலை நேர உணவாக, இரண்டு முட்டை சாப்பிட்டால் அன்றைய தினம் முழுவதும் சோர்வு இல்லாமல் உடல் இயங்கும்..(முட்டையில் அதிக சத்துகள் இருப்பதால்.) இப்படி தினமும் 2 முட்டையினை சாப்பிடுவதால் உடல் இளைக்கவும் உதவுகின்றது.

முட்டையினை சமைக்கும் பொழுது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்,

முட்டையினை கடையில் இருந்து வாங்கி வந்துவுடன், அதனை ப்ரிஜில் வைப்பது மிகவும் நல்லது.வாங்கிபொழுதோ அல்லது சமைக்கும் முன்போ(எப்படியும் சமைக்கும் பொழுது உடைக்கதான் போகிறோம்-இது அதற்கும் முன்பு-)முட்டை உடைந்து காணபட்டால் அதனை கண்டிப்பாக உபயோகிக்க கூடாது.

வேகவைத்த முட்டையினை ஒரு வாரம் வரை ப்ரிஜில் வைத்து சாப்பிடலாம்.முட்டையின் வெள்ளை கருவினை 8 10 நாட்கள் வரை ப்ரிஜில் வைத்து உபயோகிக்கலாம். மஞ்சள் கருவினை, தண்ணீர் ஊற்றி காற்று புகாத டப்பாகளில் வைத்து ப்ரிஜில் வைத்து 2 3 நாட்களுக்குள் உபயோகிக்கலாம்.

முட்டையினை வேகவைத்த பின், உடனடியாக அதனை குளிர்ந்த தண்ணீருக்கு மாற்றிவிட வேண்டியது மிகவும் நல்லது. மஞ்சள் கருவில் உள்ள சல்பர் சத்து, முட்டையின் வெள்ளை கருவில் இருக்கும் சல்பருடன் சேர்த்து முட்டையின மஞ்சள் கருவினை ஒருவித பச்சைநிறத்திற்கு மாற்றிவிடுகின்றது. ('அது நல்லது அல்ல')

முட்டையினை வேகவைக்கும் பொழுது கவனிக்கவேண்டியது: எக்ஸ்பிரி டேட்டடிற்குயிற்கு ஒரு வாரம் முன்னதாக சமைத்தால், தோல் நீக்குவது மிகவும் சுலபமாக இருக்கும். எக்ஸ்பிரி டேட்டடிற்குயிற்கு 2 &3 வாரம் முன்னதாக சமைத்தால் வேகவைத்த முட்டையில் தோலினை நீக்கிவதில் சிறிது சிரமம் எடுக்கும்.

Thursday, 2 August 2012

விந்தணு குறைபாட்டை தடுக்க நிபுணர்கள் ஆலோசனை


பண்டைய காலங்களில் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்பட்டால் பெண்களுக்கு மட்டுமே குறை இருப்பதாக கருதப்பட்டது. இதனால் குழந்தை பிறக்காததை காரணம் காட்டி பெண்ணை ஒதுக்கி வைத்து விட்டு இரண்டாம் தாரம் கூட ஆண்கள் திருமணம் செய்து கொண்டனர். தற்போது விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக சோதனை செய்யப்பட்டதில் ஆண்களின் விந்தணுக்களில் குறைபாடு இருந்தாலும் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படும் என்று கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சை முறைகளும் வந்து விட்டன. எனவே சரியான அளவில் விந்தணுக்களை அதிகரிக்க உளவியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்களேன்.

நமது கற்பனைக்குக் கூட எட்டாத கடவுளின் அற்புதங்களின் ஒன்று மகப்பேறு. ஆணின் விந்துவும், பெண்ணின் முட்டையும் சேர்ந்தால் கரு உண்டாகும். இந்த சேர்க்கை நிகழாவிட்டால், கருத்தரிப்பு ஏற்படாது. மாதவிடாய் முடிந்த 14 அல்லது 15 நாளில், பெண்ணின் சினைப்பைகளிலிருந்து சினைமுட்டை (Ovum) வெளிபடும். இது ஒரு நாள் தான் உயிரோடு இருக்கும். அதற்குள் உடலுறவு நிகழ்ந்தால் கர்ப்பம் உண்டாகும்.

உடலுறவிற்கு பின் கோடிக்கணக்கான ஆணின் விந்து அணுக்கள் பெண்ணுறுப்பில் விழும். இவை ஆவேசத்துடன் முன்நோக்கி நகர்ந்து கர்பப்பையை நோக்கி நீந்தி ஒடும். ‘ஸ்பீட்’ என்ன தெரியுமா? ஒரு செ.மீ. கடக்க கிட்டத்தட்ட 3.2 நிமிடங்கள் (8 நிமிடங்களில் 1 அங்குலம்) ஆகும். கடக்க வேண்டிய தூரம் (பெண்ணுறுப்பிலிருந்து கர்பப்பையின் தூரம்) 15 லிருந்து 25 செ.மீ. இருக்கும். இவை கர்பப்பையை அடைய நீந்துவதற்கு உதவுவது வழவழப்பான விந்து திரவம். இலக்கை அடையும் முன்பே லட்சக்கணக்கான விந்தணுக்கள் சோர்வடைந்து விழுந்து விடும். வலிமையும், நகரும் துடிப்பும் உடைய விந்தணுக்கள் தான் முட்டையை அடையும். இந்த மிகச் சிறிய (புள்ளி அளவே உள்ள) முட்டையை உயிரணுக்கள் முட்டி, முட்டி மோதும். இவற்றில் சிறந்த ஒரே ஒரு உயிரணு தான் முட்டையின் வெளிச் சவ்வை துளைத்து உள்ளே நுழையும். நுழைந்த உடனே, வேறு அணுக்கள் உள்ளே புகாதபடி சினை முட்டையில் சவ்வுப் பகுதி கதவு போல் மூடிக் கொண்டு விடும்! ஒரே ஒரு விந்தணுக்குத் தான் அனுமதி!

சாதாரணமாக ஒரு ஆணின் ஒரு மில்லி லிட்டர் விந்தில் குறைந்த பட்சம் 4 கோடி விந்தணுக்கள் இருக்க வேண்டும். அதிக பட்சமாக 12 கோடி கூட இருக்கும். இந்த குறைபாடு தான் முக்கியமான பிரச்சனை. ஆண்களின் விந்தணு உற்பத்தியில் குறைபாடு ஏற்படுவதற்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. உடலில் சூடு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை சோதனை செய்து கண்டறியலாம். புற்றுநோய் அறிகுறிகள் இருந்தாலோ, மூளையில் குறைபாடு இருந்தாலோ விந்தணு உற்பத்தி பாதிக்கும். அதேபோல் மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, சரியான உடற்பயிற்சி இன்மை, டெஸ்டோஸ்டிரன் சுரப்பு குறைபாடினாலும் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும்.

முருங்ககாயை நன்கு வேக வைத்து சாப்பிட்டு வந்தால் காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து ஒரு அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும். நெய், மிளகு,உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும். அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடவேண்டும். பின்னர் ஒரு டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும். அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வரவும். கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர பழைய நிலைமைக்கு வரலாம்.

ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும். காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

வெள்ளைப்பூண்டு விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும். இதேபோல் தர்பூசணி பழம் சாப்பிடுவதன் மூலம் விந்தணு உற்பத்தி பெருகும் என்று ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. தினசரி ஒருமணிநேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும். இது உடலில் ரத்த ஒட்டத்தின் அளவை அதிகரிக்கிறது. இதனால் டெஸ்டோடிரன் ஹார்மோன் சுரப்பும் அதிகரிக்கும். அதேபோல் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தியும் அதிகரிக்கும். இது விந்தணு உற்பத்தியை அதிகரிக்கிறது.

ஆடி -18

இன்னைக்கு ஆடி 18ங்க!

வருடத்தில் எத்தனையோ விழாக்கள் வந்தாலும், அவற்றில் தனித்துத் தெரிவதும், மிகுந்த பரவசம் கொள்ளச் செய்வதுமான விழா... ஆடிப்பெருக்கு வைபவம்தான். பெரியவர்கள் துவங்கி குழந்தைகள் வரை அனைவரும் கொண்டாடிக் குதூகலிக்கிற அற்புதமான விழா இது!

வருடத்தின் பன்னிரண்டு மாதங்களை உத்தராயன காலம் என்றும், தட்சிணாயன காலம் என்றும் பிரித்து வைத்துள்ளார்கள் சான்றோர்கள். ஆடி மாதத்தைக் கடக மாதம் என்றும் சொல்வார்கள். இந்த மாதத்தில்தான் தட்சிணாயன காலம் துவங்குகிறது.

ஆடி மாதத்தில் துவங்கி மார்கழி மாதம் வரையிலான காலம், தட்சிணாயனம். தை மாதம் துவங்கி ஆனி மாதம் வரையிலான காலம், உத்தராயனம். இது சூரியனின் பாவனா இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வரையறுக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றன சாஸ்திரங்களும் ஞான நூல்களும்.

தட்சிணாயனம் துவங்குகிற ஆடி மாதத்தில், சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும் என்பர். எனவே வேத பாராயணம், மந்திர ஜபங்கள் ஆகியவற்றைச் செய்வதற்கு உகந்த காலம் இது எனப் போற்றப்படுகிறது. தவிர, நம் சுவாசத்துக்குத் தேவையான பிராணவாயு அதிகம் கிடைப்பதும் இந்த மாதத்தில்தான்.

அற்புதமான இந்த ஆடி மாதத்தின் இன்னொரு முக்கியச் சிறப்பு... சக்தி வழிபாட்டுக்கு உரிய மாதம் இது. அதாவது, பெண் தெய்வங்களைக் கொண்டாடி திருவிழாக்கள் எடுத்து, வணங்கி ஆராதிக்கிற அருமையான மாதம். ஸ்ரீதுர்கை, ஸ்ரீகாளி, ஸ்ரீமாரியம்மன் என பெண் தெய்வங்கள் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் பொங்கல் படையலிட்டு, வேப்பிலை சார்த்தி, எலுமிச்சை மாலை அணிவித்து, கூழ் வார்த்து நைவேத்தியம் செய்து, பாலபிஷேகம் செய்து அம்மனை வழிபடுவார்கள், பக்தர்கள்.

ஆடி மாதம் முழுவதும் வழிபட்டு, வணங்குவதற்கு உரிய மாதம் என்றாலும், ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் ரொம்பவே விசேஷம்! குறிப்பாக, ஆடி மாதம் 18-ஆம் நாள், ஆடிப்பெருக்கு என சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.

'நீரின்றி அமையாது உலகு' என்றார்கள் முன்னோர்கள். அதேபோல் 'ஆடிப் பட்டம் தேடி விதை' என, ஆடி மாதத்தில் விதைத்தால் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்றும் வலியுறுத்தினார்கள். விளைச்சலுக்கும் தண்ணீருக்கும் தொடர்பு உண்டு என்பதால், தண்ணீரைப் போற்றி வழிபடுகிற வைபவமாகக் கொண்டாடப்படுகிறது ஆடிப்பெருக்கு.

இந்த நாளில், நதியோரங்களில் குடும்பம் குடும்பமாக வந்திருந்து, விளக்கேற்றி, நதிப் பெண்டிரை வணங்கித் தொழுதால், விவசாயம் தழைப்பதுபோல் வம்சமும் விருத்தியாகும் என்பது ஐதீகம். இந்த நாளில், நதிப்பெண்டிரைத் தொழுதுவிட்டுச் செய்கிற எந்தக் காரியமும் வெற்றியைத் தரும் என்கின்றனர் ஆன்றோர்கள்.

பெண் தெய்வங்களை வழிபடுவதற்கு உகந்த இந்த ஆடி மாதம், பெண்கள் வழிபட்டுப் பலன் பெறுகிற மாதமாகவும் சிறப்புறச் சொல்லப்படுகிறது. கன்னிப்பெண்கள் இந்த நாளில் நதிக்கரையில் வழிபட்டால், அவர்களுக்கு நல்ல கணவன் அமைவார் கள் என்பது நம்பிக்கை. சுமங்கலிகள் நதிக்கரைகளில் அமர்ந்து வழிபட்டால், கணவரின் ஆயுள் கூடும்; மாங்கல்ய பலம் பெருகும் என்பது ஐதீகம்.

தமிழகத்தில், காவிரி ஓடும் ஊர்களில் ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இந்த விழாவைச் சொல்வார்கள். காவிரியைத் தவிர, பெண்ணை மற்றும் பொருநை எனப்படும் தாமிரபரணி நதிகள் ஓடுகிற ஊர்களிலும் ஆடிப்பெருக்கு வைபவம் சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.

ஆடிப்பெருக்கு நாளில், திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள காவிரிக்கரையில் எம்பெருமாள் எழுந்தருள்வார். அம்மா மண்டபப் படித்துறையில் காவிரியை வணங்கிவிட்டு, எம்பெருமாளையும் தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். அன்று மாலையில் புடவை, திருமாங்கல்யம், பழங்கள் மற்றும் சீர்வரிசைப் பொருட்கள் ஆகியவற்றை காவிரிக்குச் சமர்ப்பித்து பூஜைகள் நடைபெறும். இந்தக் காட்சியைத் தரிசித்தால், புண்ணியங்கள் பெருகும் என்பது ஐதீகம்.

அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்கவேண்டும் எனில், அறுபத்தாறு கோடி தீர்த்தங்களுக்கு இணையானதும், தட்சிண கங்கை எனப் போற்றப்படுவதுமான காவிரியில் நீராடினால், சகல பாபங்களும் நீங்கும் என ஸ்ரீராமருக்கு வசிஷ்டர் அறிவுரை சொல்ல... அதன்படி ஒரு ஆடி 18-ஆம் நாளில் காவிரியில் நீராடி, பாபம் நீங்கப் பெற்றார் ஸ்ரீராமர் என்றும் சொல்வார்கள்.

தென் தமிழகத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையிலும், தென்னிந்தியாவின் திரிவேணி சங்கமம் எனப்படும் ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையிலும் ஆடிப்பெருக்கு சிறப்புறக் கொண்டாடப்படும். கூடுதுறை அருகில் உள்ள ஸ்ரீசங்கமேஸ்வரர் கோயில் நடை, அன்று அதிகாலையிலேயே திறக்கப்பட்டு, விசேஷ பூஜைகள் நடைபெறும். அம்பிகைக்கு தேங்காய், பழம், பூ, கருமணி ஆகியவற்றைப் படைத்து ஆராதிப்பார்கள். அப்போது பூஜையில் வைக்கப்பட்ட மஞ்சள் சரடை எடுத்து பெண்கள் தங்கள் கழுத்திலும், ஆண்கள் வலது கை மணிக்கட்டிலும் கட்டிக்கொள்வார்கள். இதனால் வீட்டில் மங்கல காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது ஐதீகம். 

தாமிரபரணியிலும் இதேபோல் வழிபாடுகள் நடைபெறும். அத்துடன், இலையில் சூடமேற்றி, அதனை நதியில் மிதக்க விடுவது வழக்கம்! அதேபோல், வீடுகளில் இருந்து முளைப்பாரி எடுத்து வந்தும் ஆற்றில் விடுகின்றனர். அன்றைய நாளில், கரையில் பூஜைகளைச் செய்துவிட்டு, சித்ரான் னங்களைக் குடும்பம் குடும்பமாக அமர்ந்து சாப்பிட்டுச் செல்வார்கள். ஆடிப்பெருக்கு நாளில் வீட்டில் மாக்கோலமிட்டு, சர்க்கரைப் பொங்கல் படைத்து, அம்பிகையை வழிபடுபவர்களும் உண்டு.

குறிப்பாக, புதுமணத் தம்பதிகள் குடும்பத்துடன் ஆற்றங்கரைக்கு வந்து, திருமணத்தின்போது தாங்கள் அணிந்த மாலையை ஆற்றில் விட்டுவிட்டு, புதுத் தாலிச்சரடு கட்டுகிற சடங்கை அங்கே செய்வார்கள். திருமணத் தடையால் அவதிப்படும் பெண்கள் பனை ஓலையால் செய்யப்பட்ட தோடு, கருகமணி மற்றும் காப்பரிசி வைத்து வணங்குவார்கள்.

சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான ம‌க்க‌ள் ஒகேன‌க்க‌ல், மே‌‌ட்டூ‌ருக்கு வந்து ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடுகின்றனர். அப்போது, மேட்டுரில் உள்ள அணைக்கட்டு முனுசாமி ஆண்டவருக்கு ஆடு- கோழிகளை பலியிட்டுப் பிரார்த்திக்கின்றனர். திருச்சி கல்லணைப் பகுதியில் புதுமணத் தம்பதிகள் வந்து புனித நீராடி, தாலிச்சரடு மாற்றிக் கட்டிக் கொள்வார்கள்.

  • பாரதப்போர் ஆடி 1 ஆரம்பிச்சு, ஆடி 18 முடிஞ்சதாவும் சொல்லுவாங்க. அதுக்கும் ஒரு கொண்டாட்டம் இருக்கும்.
  • காவேரி, செந்தண்ணியா ஓடும். இந்த சமயத்துல வயலடிச்சு நெல் விதைக்க ஆரம்பிப்போம், அதுக்கும் ஒரு கொண்டாட்டம்.
  • பள்ளிகூடம் விடுமுறை வேறயா அதுவே ஒரு கொண்டாட்டம்.
  • புதுசா கல்யாணம் ஆன புருசன்மார்ங்க எல்லாம் மாமியார் வீட்ல இருந்து பொண்டாட்டிய கூட்டிட்டு வர சந்தோசம்.
ஆடிப்பெருக்கு விழாவை நதிக்கரையில் கொண்டாடுவோம்; நதி தேவதையை வணங்கித் தொழுவோம். வாழ்வில் சந்தோஷம், அமைதி, உயர்வு ஆகியன பல்கிப் பெருகுவது உறுதி!