Thursday, 6 October 2011

ஊனம்


மாநாட்டிலிருந்து கடைசி மந்திரி விமான நிலையத்துக்குவந்து சேர்ந்தார்.

காலையிலிருந்து காத்திருப்பும் தொடர் சல்யூட்களுமாய்ஏட்டு வேலுமணியின் உடலை வருத்தியிருந்தன.இன்னும் முக்கால் மணிநேரமாவது ஆகும் அவர் வீடுசெல்ல.

"சார்நல்லா இருக்கியளா?"

குரல்கேட்டுத் திரும்பினார் வேலுமணி.

"டேய் ராசையா எப்டி இருக்க?" வந்தவனைப் பார்த்து சிரித்தார் ஏட்டு தோளில்தட்டியபடியே

"என்னடே இங்கதுபாய்க்கு எதாவது போறியா?"

"என் கடேசி தம்பி அமெரிக்கா போறான்."

"அமெரிக்காவுக்காரெம்ப சந்தோஷம்டேவேலைக்காபோறான்?

"ஆமா."

"ஒங்கப்பன் எப்டி இருக்கான்?"

"அவரு போயி ரெண்டு வருசமாவுது சார்."

"அப்டியாஊருக்கு வந்து வருசக்கணக்காவுதுபரவாயில்லியேடே என்ன நியாபகம்வச்சிருக்கியேதண்ணி பாட்டில் வாங்கவந்தியோ?"

"ஆமாதம்பி அங்க வரிசைல நிக்கான்."

"அப்ப போ தம்பிபாப்போம்."

வந்தவன் திரும்பி நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தார் ஏட்டுபைக்கின் சப்தம் கேட்டுதிரும்பி தனிச்சையாய் சப் இன்ஸ்பெக்டர் செல்வத்துக்கு சல்யூட்வைத்தார்.
"யார் சார் அது?" சப் இன்ஸ்பெக்டர் கேட்டார்.

"சார்இவன் எங்க ஊரு நாசுவனோடப் பையன் சார்."

"நாசுவன்னா?"

"முடிவெட்றவர்நாவிதர்."

"இங்க என்ன பண்றான்?"

"இவன் தம்பி, கடைசில உள்ளவன் அமெரிக்கா போறானாம்வழியனுப்ப வந்திருக்கான்.நம்ம பையன்கூட படிச்ச பய."

"பரவாயில்லியே."

"காலகாலமா எங்க ஊர்ல இவங்கதான் முடிவெட்றது சாவுக்கு சேதி சொல்றதெல்லாமே.இப்ப எல்லா மாறிப்போச்சு"

"ம்ம்ம்"

"இந்தா போறானே ராசையாஇவன் இப்ப பஸ் ஸ்டாண்ட்ல சலூன் வச்சிருக்கான்."

"இப்படி ஒரு பையன் அமெரிக்கா போறது பெரிய விஷயந்தான்."

"என்ன சார் சொல்ல இவனுங்க ரிசர்வேஷன்ல சர்ர்ருன்னு மேல வந்துற்றானுவநம்மபுள்ளைக கஷ்ட்டப்படுதுங்க."

"காலேஜ்ல சேர்றதுக்குத்தானே இட ஒதுக்கீடு அங்க படிக்கிறது அவனவன் தெறம சார்.இப்ப ஒங்க பையன, ஒங்க சாதி .ஜி கிட்ட சொல்லி ரெக்கமண்டேசனோட காலேஜ்லசேத்தீங்கஇந்தப் பையனுக்கு அரசாங்கமே ரெக்கமெண்டேஷன் தந்திருக்குன்னுசொல்லலாம்லியாஅதுக்கப்புறம் ஒங்க பையனமாதிரி படிப்ப பாதியிலே நிறுத்துறதும்முழுசா முடிச்சு வேலைக்குப் போறதும் அரசாங்கமா வந்து செய்யுது?"

"சரிதான் ஆனாலும் தெறமயில்லாட்டியும் இவங்களுக்கு வேல கெடைக்குதே சார்."

"இந்தப் பையன் அமெரிக்கா போறான் சார்அமெரிக்கா போறதுக்கு ஃப்ளைட்லதான்ரிசர்வேஷன் உண்டு வேலைக்கில்லஇவன்கிட்ட திறமயில்லன்னு எப்டி சொல்வீங்க?"

"..........""நாளைக்கும் ஏர்போர்ட் வந்துருங்க." பைக்கை கிளப்பினார் சப் இன்ஸ்பெக்டர்.

ஏட்டுதறுதலையாய் சுற்றிக்கொண்டிருக்கும் தன் மகனை நினைத்துக்கொண்டே,தூரத்தில் தன் கால் ஊனமுற்ற தம்பியின் சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு ராசையாநுழைவாயிலை கடப்பதை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.

No comments:

Post a Comment