Sunday, 25 September 2011

கண்நிறைந்த அழகு!

ஒரு வியாபாரிக்கு ஐந்து பிள்ளைகள் இருந்தனர். ஐவரும் பெண் பிள்ளைகள். வியாபாரியும் நன்கு சம்பாதிப்பவர். ஆகையால், தன் பிள்ளைகளுக்கு எந்தக் குறையும் இல்லாமல் வளர்த்து வந்தார்.

அவர்கள் விரும்பிக் கேட்பதைத் தட்டாமல் வாங்கிக் கொடுப்பர் பெற்றோர். சகோதரிகளில் இளையவள் மட்டும் சற்று நிறம் மங்கி, கருப்பாக, அழகில்லாதவள் போல் தோன்றுவாள். மற்ற மூத்த நான்கு சகோதரிகளும் நல்ல சிவப்புடன் அழகாக இருப்பர்.

இது இவர்களுக்கு மனதில் கர்வத்தை வளர்த்தது. இவர்கள் எப்போதும் தங்களை சிங்காரித்துக் கொண்டு, கண்ணாடி முன் நிற்பதே வழக்கமாகி விட்டது. தப்பித் தவறி தன்னை அழகுப்படுத்திக் கொள்ள இளையவள் கண்ணாடி முன் நின்று விட்டால், மூத்த சகோதரிகள் ரசனையில்லாத வார்த்தைகளால் விமர்சனம் செய்ய ஆரம்பித்து விடுவர்.

இதனால் இளையவள் தனக்குள் அழுது வேதனைப்படுவாள். இளையவள், மூத்தவர்களைக் காட்டிலும் இரக்க சிந்தனையும், உதவும் மனப்பான்மையும் கொண்டவள். மூத்த பெண்களின் குணம், இளையவளுக்கு நேர் எதிரானது. தங்கள் அழகில் கர்வம் கொண்டு, வேறு எவரையும் மதிக்கவும் மாட்டர். எனவே, மற்றவர்களிடமும் அவர்களுக்கு நல்ல பெயரே இல்லை.
ஏழைக்கு அன்பு காட்டும் இளையவளை தர்மதேவதை என்று தான் போற்றுவர் மக்கள். இவ்வளவு ஈகைக் குணம், சிறந்த பண்புகள் இருந்தும் புற அழகு போதவில்லையே... அதனால் தானே சகோதரிகள் தம்மை வெறுக்கின்றனர் என நினைத்து வேதனைப்படுவாள்.

இளையவனின் வேதனையைப் பெற்றோர் நன்கு புரிந்து கொண்டனர்.
ஒருநாள் இளையவளை அவர்கள் அழைத்து, ""நிலா இப்படி உட்கார்!'' என்றனர்.
அவளும் பெற்றோரிடம் ஆசையுடன் அமர்ந்தாள். ""உன் மூத்த சகோதரிகள் உன்னை மதிக்கவில்லை என்பது எங்களுக்கு தெரியும்; அதற்காகக் கவலைப்படாதே. புற அழகைக் காட்டிலும், உன் மன அழகுதான் மிகவும் அற்புதமானது.

""அதுதான் அனைவரையும் கவரும் காந்தம் போன்றது. எக்காலமும் உன் அழகுதான் வளரும், நிரந்தரமாயும் இருக்கும். இவர்களின் வெளித்தோற்ற அழகு, காலப்போக்கில் மாறிவிடும். அதை உணர்ந்து கொள் போதும்!'' என ஆறுதல் கூறினர். மன நிம்மதி அடைந்தாள் நிலா

நன்றி: சிறுவர் மலர்

No comments:

Post a Comment