இடம், பொருள், ஏவல் அறிந்து பேச வேண்டும் என்பார்கள்.
உதாரணத்திற்கு...
உதாரணத்திற்கு...
- ஒரு ஏழை நபர் முன் நமது பணத்தை பற்றி பேச வேண்டாம்.
- ஒரு நோயாளிக்கு முன் நமது உடல் நலம் பற்றி பேச வேண்டாம்.
- ஒரு பலவீனமான நபர் முன் நமது சக்தி பற்றி பேச வேண்டாம்.
- ஒரு சோகமான நபர் முன் நமது மகிழ்ச்சியை பற்றி பேச வேண்டாம்.
- ஒரு கைதி முன் நமது சுதந்திரம் பற்றி பேச வேண்டாம்.
- ஒரு முதிர்கன்னியின் முன்பு நமது வாழ்க்கைத்துணையைப்பற்றி பேச வேண்டாம்.
- ஒரு குழந்தை இல்லாத நபர் முன் நமது குழந்தைகள் பற்றி பேச வேண்டாம்.
- ஒரு அனாதை முன் நமது தந்தை பற்றி பேச வேண்டாம்.
- ஏனெனில்,அவர்கள் காயங்களை மேலும் தாங்க முடியாது
No comments:
Post a Comment