மரணத்தின் தூதுவர்களிடம் மன்றாடினார் அந்தத் தொழிலதிபர்.
”என் வாழ்வில் இருவரை மிகவும் காயப்படுத்தினேன். அவர்கள் மன்னிப்பைப் பெற்றுவரும்வரை விட்டு வையுங்கள்” என்று.
எத்தனை வருடங்களுக்கு முன்? என்றது மரண தேவதை.
”முப்பது வருடங்களுக்கு முன் காயப் படுத்தினேன். மன்னிப்புக் கேட்க இத்தனை நாளாய் நேரமே கிடைக்கவில்லை” என்றார்
. பட்டியலை சரி பார்த்துவிட்டு மரண தேவதை சொன்னது
, ”உன்னால் காயப்பட்டவர்கள் உத்தமர்கள். நீ காயப்படுத்திய அன்றே உனக்காக கடவுளிடம் அவர்கள் மன்னிப்பு கேட்டு விட்டார்கள்” என்று.
மோசமான நண்பர்களைவிட மேன்மையான எதிரிகள் மேலானவர்கள்.
No comments:
Post a Comment