Saturday, 8 September 2012
மரண வாயில்
மரணத்தின் தூதுவர்களிடம் மன்றாடினார் அந்தத் தொழிலதிபர்.
”என் வாழ்வில் இருவரை மிகவும் காயப்படுத்தினேன். அவர்கள் மன்னிப்பைப் பெற்றுவரும்வரை விட்டு வையுங்கள்” என்று.
எத்தனை வருடங்களுக்கு முன்? என்றது மரண தேவதை.
”முப்பது வருடங்களுக்கு முன் காயப் படுத்தினேன். மன்னிப்புக் கேட்க இத்தனை நாளாய் நேரமே கிடைக்கவில்லை” என்றார்
. பட்டியலை சரி பார்த்துவிட்டு மரண தேவதை சொன்னது
, ”உன்னால் காயப்பட்டவர்கள் உத்தமர்கள். நீ காயப்படுத்திய அன்றே உனக்காக கடவுளிடம் அவர்கள் மன்னிப்பு கேட்டு விட்டார்கள்” என்று.
மோசமான நண்பர்களைவிட மேன்மையான எதிரிகள் மேலானவர்கள்.
அச்சம் தவிர்
அக்பரிடம் ஓர் அறிவாளி சவால் விட்டார்.
“என் வேலைக்காரன் பெருந்தீனிக்காரன்! அவனை ஒரு மாதம் வைத்திருந்து ஊட்டச்சத்துமிக்க உணவுகளைக் கொடுங்கள்.
அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது.
ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது!” பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார்
. மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.
மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது.
அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்,
“அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன்.
கூண்டின் பூட்டு சரியாக இல்லை என்று சொன்னேன்.
அச்சம் காரணமாய் ஊட்டச்சத்து உடலில் ஒட்டவில்லை.”
அச்சமின்மையே ஆரோக்கியம்!
அச்சத்தை நீக்கி ஆரோக்கியம் வளர்ப்போம் நண்பர்களே !!!
முயற்சி
அந்த இளம்பெண் தன் வீட்டுச் சுவரில் பூங்கொடி ஒன்றினை நட்டிருந்தாள்.
ஆசை ஆசையாய் நீர்பாய்ச்சி ஆர்வமாய் வளர்த்தாள். பூங்கொடி நீண்டுகொண்டே போனதே தவிர பூப் பூத்ததாய்த் தெரியவில்லை.
அவள் வருத்தத்திலிருந்த போது
சக்கர நாற்காலியை உருட்டிக்கொண்டே வந்த பக்கத்து வீட்டுக்காரர், அவளுக்கு நன்றி தெரிவித்தார்.
“உங்கள் வீட்டிலிருந்து படர்ந்த கொடி எங்கள் வீட்டுக்குள் எப்படியெல்லாம் பூத்துக் குலுங்குகிறது தெரியுமா? மிக்க நன்றி” என்றார்.
நம்முடைய சில முயற்சிகளின் விளைவுகள் நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும்
எங்கோ எவருக்கோ நன்மை கொடுக்கும். பயனில்லாத முயற்சியென்று எதுவுமில்லை.
ஆசை ஆசையாய் நீர்பாய்ச்சி ஆர்வமாய் வளர்த்தாள். பூங்கொடி நீண்டுகொண்டே போனதே தவிர பூப் பூத்ததாய்த் தெரியவில்லை.
அவள் வருத்தத்திலிருந்த போது
சக்கர நாற்காலியை உருட்டிக்கொண்டே வந்த பக்கத்து வீட்டுக்காரர், அவளுக்கு நன்றி தெரிவித்தார்.
“உங்கள் வீட்டிலிருந்து படர்ந்த கொடி எங்கள் வீட்டுக்குள் எப்படியெல்லாம் பூத்துக் குலுங்குகிறது தெரியுமா? மிக்க நன்றி” என்றார்.
நம்முடைய சில முயற்சிகளின் விளைவுகள் நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும்
எங்கோ எவருக்கோ நன்மை கொடுக்கும். பயனில்லாத முயற்சியென்று எதுவுமில்லை.
உன்னிடம் இருப்பதே உலகத்தில்
தான் சந்திக்கும் மனிதர்களின் தன்மை கண்டு நொந்த மனிதன் கடவுளிடம் ஒரு வரம் கேட்டான்.
“அன்பு, புரிதல், அமைதி, பண்பு எல்லாம் கொண்ட ஒரேயொரு மனிதனைக் கொடு”. கடவுள்,
“முடியாது” என்றார்.
‘உங்களால் முடியாததும் உண்டா என்ன?” திகைத்த மனிதனிடம் சொன்னார், “நீ கேட்ட
“நீ கேட்டகுணங்களுடன் ஒரு மனிதனை நான் உருவாக்குவதைவிட இந்த குணங்கள் கொண்ட மனிதனாக நீயே உருவாகிவிடு. அப்படி உருவானால்
இந்த குணங்கள் எல்லோரிடமும் இருப்பதை கண்டுபிடிப்பாய்” என்று.
உன்னிடம் இருப்பதே உலகத்தில்!!
Thursday, 30 August 2012
அரசியின் கொட்டாவி - Part 10
அம்மயாருக்கு இது மிகுந்த வேதனையைத் தந்தது. மிகவும் வருத்தத்துடன் இருந்த அம்மையாரைப் பார்த்த தெனாலிராமன் என்ன நடந்தது என்று விசாரித்தார்.
அம்மையாரோ, நான் கொட்டாவி விடுவது பிடிக்காமல் மன்னர் எனது இருப்பிடத்திற்கு வருவதையே நிறுத்திவிட்டார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை" என்று வருந்தினாள்.
தெனாலிராமன் இப்பிரச்சனையைத் தீர்ப்பதாக அம்மையாருக்கு வாக்குகொடுத்துச் சென்றான்.
ஒரு நாள் அரசு அதிகாரிகள் சிலர் அரசரைக் காண வந்தனர். அப்போது தெனாலிராமனும் அரசருடனிருந்தான். அந்த அதிகாரிகள் நாட்டில் பயிர்வளத்தை எப்படி மேம்படுத்துவது என்பது பற்றி அரசருடன் விவாதித்துக் கொண்டிருந்தனர்.
தெனாலி ராமனோ அவர்களது பேச்சினுள் புகுந்து "பயிர் நன்றாக வளர வேண்டுமானால் யாரும் கொட்டாவி விடக்கூடாது" என்றான்.
மன்னரும் மற்றவர்களும் தெனாலிராமனை வினோதமாகப் பார்த்தனர். தெனாலிராமனோ விடாமல் "விவசாயம் செய்பவர்கள் யாரும் வாழ்நாள் முழுவதும் கொட்டாவி விடவே கூடாது. அப்போது தான் பயிர் நன்றாக வளரும்" என்றான்.
மன்னருக்கு கோபம் வந்துவிட்டது. "ராமா, இது என்ன வினோதம், விவசாயத்திற்காக வாழ்நாள் முழுவதும் கொட்டாவி விடாமல் இருக்கமுடியுமா?" என்றார்.
"வேறென்ன மன்னா, உங்கள் முன்னால் கொட்டாவி விடும்போது உங்களுக்கு கோபம் வருவதைப் போல, பயிர்கள் முன்னால் கொட்டாவி விட்டால் பயிர்கள் கோபித்துக்கொள்ளாதா? கேவலம் கொட்டாவியால் ஒருவர் வாழ்க்கை நாசம் ஆக வேண்டுமா?" என்று கூறிவிட்டு மன்னரை ஓரக்கண்ணால் பார்த்தார் தெனாலி ராமன்.
மன்னருக்கு தெனாலிராமன் சூசகமாக் என்ன சொன்னார் என்று புரிந்து போனது. அப்போதே கேவலம் கொட்டாவிக்காக தன் மனைவியை கோபித்துக் கொண்டேனே என்று வருந்தினார். தெனாலி ராமன் புத்திசாலித்தனமாக தகுந்த நேரத்தில் அதை புரியவைத்தான் என்பதையும்
எண்ணி மகிழ்ந்தார்.
பின்னர் மகிழ்ச்சியில் திளைத்த அம்மையாரும் மன்னரும் சேர்ந்து, தெனாலிராமனுக்கு பரிசுகளை பல அளித்து மகிழ்ந்தார்கள்.
Ref: tamilkalanjiyam.com
இராஜாங்க விருந்து - Part 9
ஒரு நாள் அரன்மனையில் பெரிய விருந்து நடந்தது. ராஜகுருவும் தெனாலிராமனும்
ருசித்து, ரசித்து உண்டு மகிழ்ந்தார்கள்.
விருந்துக்குப் பின் இருவரும் ஒரு மண்டபத்தில் அமர்ந்து சாவதானமாக பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ராஜகுரு "இது போன்ற விருந்து உடலுக்கும் உள்லத்துக்கும் நல்ல சுகம் அளிக்கிறது" என்றார்.
இதைக் கேட்ட தெனாலிராமன் அவரை சீண்டிப்பார்க்க தீர்மானித்தார். "உண்பதை விட, உண்டதைக் கழிப்பதில் தான் தனிச் சுகம்
இருக்கிறது" என்றார் தெனாலிராமன். ராஜகுருவோ சற்று முறைப்பாக "ராஜாங்க விருந்தைப் பழிக்காதே ராமா! இது போன்ற விருந்தை
உண்பதே தனி சுகம் தான்" என்றார்.
தெனாலிராமனோ "கொண்டதை விட கழிப்பதில் தனிசுகம் இருக்கிறது என்பதை நான் ஒரு நாளைக்கு உங்களுக்கு உணர்த்துகிறேன்" என்று கூறி அங்கிருந்து சென்று விட்டார்.
ராஜகுரு ஒரு நாள் ஒரு தனியறையில் இருந்த சமயம் பார்த்து வெளியே பூட்டி விட்டார் தெனாலி ராமன். உள்ளேயிருந்த குருவுக்கு மலம்
கழிக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது. கதவு வெளியே பூட்டப்பட்டிருந்ததால் அவர் பல முறை தட்டினார். பலனில்லை. அவசரத்தில் தவியாய் தவித்துக் கொண்டிருந்தார்.
அவரை நன்றாக தவிக்க விட்டு, கொஞ்ச நேரம் கழித்து ராமன் கதவைத் திறந்தான். அவர் வேகமாக வெளியே வந்து கழிவரை நோக்கி ஓடினார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த ராஜகுரு தெனாலிராமனைப் பார்த்து மூச்சு வாங்கப் பேசினார். "அப்பாடா! ராமா! கழிப்பது தனிசுகம் தான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இது போன்ற விபரீத விளையாட்டை இனிமேல் செய்யாதே" என்றார்.
தெனாலிராமன் தான் சொன்னதை செய்துகாட்டிவிட்டதை நினைத்து இருவரும் அடக்க முடியாமல் சிரித்தனர்.
Ref: tamilkalanjiyam.com
விருந்துக்குப் பின் இருவரும் ஒரு மண்டபத்தில் அமர்ந்து சாவதானமாக பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ராஜகுரு "இது போன்ற விருந்து உடலுக்கும் உள்லத்துக்கும் நல்ல சுகம் அளிக்கிறது" என்றார்.
இதைக் கேட்ட தெனாலிராமன் அவரை சீண்டிப்பார்க்க தீர்மானித்தார். "உண்பதை விட, உண்டதைக் கழிப்பதில் தான் தனிச் சுகம்
இருக்கிறது" என்றார் தெனாலிராமன். ராஜகுருவோ சற்று முறைப்பாக "ராஜாங்க விருந்தைப் பழிக்காதே ராமா! இது போன்ற விருந்தை
உண்பதே தனி சுகம் தான்" என்றார்.
தெனாலிராமனோ "கொண்டதை விட கழிப்பதில் தனிசுகம் இருக்கிறது என்பதை நான் ஒரு நாளைக்கு உங்களுக்கு உணர்த்துகிறேன்" என்று கூறி அங்கிருந்து சென்று விட்டார்.
ராஜகுரு ஒரு நாள் ஒரு தனியறையில் இருந்த சமயம் பார்த்து வெளியே பூட்டி விட்டார் தெனாலி ராமன். உள்ளேயிருந்த குருவுக்கு மலம்
கழிக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது. கதவு வெளியே பூட்டப்பட்டிருந்ததால் அவர் பல முறை தட்டினார். பலனில்லை. அவசரத்தில் தவியாய் தவித்துக் கொண்டிருந்தார்.
அவரை நன்றாக தவிக்க விட்டு, கொஞ்ச நேரம் கழித்து ராமன் கதவைத் திறந்தான். அவர் வேகமாக வெளியே வந்து கழிவரை நோக்கி ஓடினார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த ராஜகுரு தெனாலிராமனைப் பார்த்து மூச்சு வாங்கப் பேசினார். "அப்பாடா! ராமா! கழிப்பது தனிசுகம் தான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இது போன்ற விபரீத விளையாட்டை இனிமேல் செய்யாதே" என்றார்.
தெனாலிராமன் தான் சொன்னதை செய்துகாட்டிவிட்டதை நினைத்து இருவரும் அடக்க முடியாமல் சிரித்தனர்.
Ref: tamilkalanjiyam.com
Tuesday, 14 August 2012
பொன்னாங்கண்ணி கீரையின் மகிமைகள்
பொன்னாங்கண்ணி அல்லது பொன்னாங்காணி கீரை ஈரப்பதம் மிக்க இடங்களில் வாழும் தாவரம் ஆகும். இக்கீரைக்கு கொடுப்பை, சீதை என்னும் வேறு பெயர்களும் உண்டு. இது உலகில் பல்வேறு நாடுகளில் உணவுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதன் இளம் தளிர்ப் பாகங்கள் உணவுக்குப் பயன்படும். உணவு மற்றும் மருத்துவத் ர்தேவைகளுக்காகப் பயிரிடவும் படுகிறது.
பொன்னாங் கண்ணி கீரை, இப்பூவுலகில் பூத உடலைத்தேற்றிக் கோவிலாக்க வந்த சிவாம்சம் என்பதை மறந்து விடாதீர்கள்.
குடற்புண் குணமாக...
பொன்னாங்கண்ணி கீரைச்சாறு, கரிசலாங் கண்ணி கீரைச்சாறு வகைக்கு 100 மி.லி.அளவு எடுத்து ஒன்றாய் கலந்து கொள்ளவும். இதில் 50 கிராம் அதிமதுரத்தை பால்விட்டரைத்து விழுதாக்கி, மேற்படி சாறுடன் கலந்து கொள்ளவும். பின்னர் இதனைமெழுகுப் பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொள்ளுங்கள். இதை தினமும் காலை, மாலைஇருவேளையும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர வாய்ப்புண், வயிற்றுப்புண்போன்றவை குணமாகும்.
நரம்புத் தளர்ச்சி நீங்க...
பொன்னாங்கண்ணிக் கீரை, செம்பருத்திப்பூ, ஆவாரம்பூ, ரோஜாப்பூ, கொன்றைப்பூஆகியவற்றை வகைக்கு 50 கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும்.இதில் ஐந்து கிராம் அளவு தினசரி உணவுக்குப்பின் இரவில் மட்டும் சாப்பிட்டுவர வேண்டும். இத்துடன் மறக்காமல் ஒரு டம்ளர் பாலும் சாப்பிட்டு வர, இரண்டுமாதங்களில் நரம்புத் தளர்ச்சி பூரணமாய் குணமாகும். மேலும் ஆண்மைக்குறைபாடுகளும் தீரும்.
அபார நினைவாற்றல் பெற...
பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, சீந்தில், வல்லாரை ஆகியவற்றை வகைக்கு 100கிராம் எடுத்து ஒன்று கலந்து தூள் செய்து கொள்ளவும். இதில் மூன்று கிராம்அளவு, ஒரு டம்ளர் பசும்பாலுடன் சேர்த்து காலை- மாலை சாப்பிட்டு வர, அபாரநினைவாற்றல் உண்டாகும். மேலும் சோர்வு, பட படப்பு, தூக்கமின்மை, ரத்தஅழுத்தம், மன அழுத்தம், மன உளைச்சல் போன்ற கோளாறுகளும் தீரும்.
வெள்ளைப்படுதல் குணமாக...
பொன்னாங்கண்ணிச்சாறு, கரிசலாங் கண்ணிச்சாறு, பசு நெய், பசும்பால் எனஒவ்வொன்றிலும் வகைக்கு 60 மி.லி. அளவுக்கு எடுத்து ஒன்றாகக் கலக்கிக்காய்ச்சி, மெழுகு பதத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும். இதில் தினமும்காலை- மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் (ஐந்து கிராம்) அளவுக்குச்சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் ஒரே வாரத்தில் குணமடையும். கை- கால்எரிச்சல், பித்த மயக்கம் போன்ற பாதிப்புகளும் குணமாகும்.
கண் நோய்கள் விலக...
பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சிறிது மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள்,பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து தொடர்ந்து 48 நாட்கள் (ஒருமண்டலம்) சாப்பிட்டு வர, கண் தொடர்பான அனைத்து வியாதிகளும் தீரும்.
மேனியழகு உண்டாக...
100 கிராம் பொன்னாங்கண்ணி (காய்ந்தது), 100 கிராம் பிஸ்தா பருப்புஇரண்டையும் ஒன்றாக்கி அரைத்துத் தூள் செய்து சலித்து வைத்துக் கொள்ளவும்.இதில் ஒரு ஸ்பூன் அளவு காலையும் மாலையும் சாப்பிட்டு வர, உடலுக்கு அழகும்பொன்னிறமும் ஒருசேர உண்டாகும்.
முகப்பரு, தேமல், படர்தாமரை விலக...
முந்திரிப் பருப்பு, முள்ளங்கி விதை சம அளவு எடுத்து, பொன்னாங்கண்ணிச் சாறு விட்டரைத்து பரு, தேமல், படர்தாமரை யின்மீது போட்டுவர, ஒரே வாரத்தில் குணமாகும்.
உஷ்ணம் தீர...
பொன்னாங்கண்ணிக் கீரையை விழுதாய் அரைத்து தலையில் தேய்த்துக் குளிக்க, உடல் உஷ்ணம், கண்நோய்கள் போன்றவை விலகும்.
நீண்ட கூந்தல் வளர்ச்சிக்கு...
இங்கு நான் உங்களுக்காக சித்தர்களால் அருளப்பட்ட ஒரு மிகச் சிறந்த கூந்தல்தைலத்தைப் பற்றிய குறிப்பை சொல்கிறேன். கவனமாய் குறிப்பெடுத்து, கருமையானகூந்தலுக்கு அச்சாரம் போடுங்கள்.
தேவதாருக்கட்டை- 50 கிராம்
கோஷ்டம்- 50 கிராம்
ஏலக்காய்- 50 கிராம்
வெள்ளைக் குண்டுமணிப் பருப்பு- 50 கிராம்
ஏலரிசி- 50 கிராம்
பொன்னாங்கண்ணிச் சாறு- அரை லிட்டர்
முதலில், வெள்ளைக் குண்டுமணியை பசும்பாலில் 12 மணி நேரம் ஊறவைத்து அதன்தோலை அகற்றிவிடவும். பின்னர் ஏலக்காயை உடைத்து உள்ளிருக்கும் விதையைமட்டும் 50 கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். தேவதாரு, கோஷ்டம்இரண்டையும் நன்றாகத் தூள் செய்து, அத்துடன் வெள்ளைக் குண்டு மணிப்பருப்பு, ஏலரிசி ஆகியவற்றைச் சேர்த்து, சிறிது பொன்னாங்கண்ணிச் சாறுவிட்டரைத்து விழுதாக்கவும். அரைத்த விழுதை மீதமுள்ள பொன்னாங்கண்ணிச்சாற்றுடன் கலந்து மறுபடியும் 12 மணி நேரம் ஊற வைக்கவும்.
இனி, இரண்டு லிட்டர் நல்லெண்ணெயை அடுப்பிலேற்றி, ஏற்கெனவே தயாரித்துவைக்கப்பட்டுள்ள பொன்னாங்கண்ணி விழுதையும் சேர்த்து, பதமுறக் காய்ச்சவும்.தைலம், கடுகு பதத்தில் திரளும்போது இறக்கவும். சூடு ஆறியபின் தைலத்தைவடிகட்டி பத்திரப்படுத்தவும்.
இந்தத் தைலத்தைப் பயன்படுத்தினால் தலைமுடி நன்றாக வளரும். குறிப்பாகப்பெண்களுக்கு அவர்களே அதிசயிக்கத்தக்க அளவில் கூந்தல் மிக நீளமாகவும் கறுமையாகவும் வளரும். வழுக்கைத் தலையில்கூட முடி முளைக்கும். மேலும் உஷ்ணநோய்கள், கண்ணெரிச்சல், பித்த மயக்கம் போன்றவைகூட இருந்த இடம் தெரியாமல்மறைந்து விடும்.
இளநரை நீங்க...
பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, கொட்டைக் கரந்தை, குப்பைமேனி, சிறுசெருப்படை ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் சேர்த்து தூள் செய்து கொள்ளவும்.இதில் ஒரு ஸ்பூன் அளவு காலை- மாலை சாப்பிட்டு பசும்பால் அருந்தி வர இளநரைமறையும். மேலும் நரை வருவதும் நின்றுவிடும்.
நூறாண்டு வாழ...
பொன்னாங்கண்ணியில் தங்கத்தின் சத்து அடங்கியுள்ளது. பொன்னாங்கண்ணியைத்தவறாது நமது உணவில் சேர்த்து வர வேண்டும். பொன்னாங்கண்ணித் தைலம் கடைகளில்வெகு சாதாரணமாய்க் கிடைக்கிறது. அதனை வாங்கி வாரம் ஒரு முறையேனும் தலைமுழுகி வர வேண்டும். பொன்னாங்கண்ணி சித்தர்கள் நமக்கு அருளிய வரம்.பொன்னாங்கண்ணியால் இந்த உடலைப் பண்படுத்தி, ஆத்ம சுகம் பெறுவோம்.
Reference: www.nakkheeran.in
Thursday, 9 August 2012
கோகுலாஷ்டமி
இன்று கோகுலாஷ்டமி ...
நம் பாரத நாட்டில் பல நூற்றாண்டுகளாக கலாசாரம், பண்பாட்டை பேணிக் காக்கும் வகையில் பல உற்சவங்கள், பண்டிகைகள், விரதங்கள், திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நம்மை வாழ வைக்கும் இறைவனுக்கும், இயற்கை சக்திகளுக்கும் நன்றியையும் பிரார்த்தனையும் சமர்ப்பிக்கின்றனர். இவ்வாறு நாடு முழுவதும் உற்சாகமாகவும் பக்திப் பெருக்குடனும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று கிருஷ்ண ஜெயந்தி. இது ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி, ராச லீலா, தகிஅண்டி என பல பெயர்களில், பல வடிவங்களில் அவரவர் வழக்கப்படி இப்பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர்.
5222 ஆண்டுகளுக்கு முன்பு பகுள அஷ்டமி, தேய்பிறை திதியில் ரிஷப லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்ததாக சாஸ்திர அளவியல் கணக்குகள் மூலம் தெரிய வருகிறது. வேத காலத்தில் இருந்து வழிபட்டு வரப்படும் ஒரு வழிமுறைதான் ஸ்ரீநாராயண வழிபாடு. வேதத்தில் நாராயண சூக்தம் என்ற பகுதி உள்ளது. இதன்மூலம் கிருஷ்ண வழிபாடு மிகவும் தொன்மை வாய்ந்தது என்பதை அறியலாம். ஜோதிட சாஸ்திரத்தில் அஷ்டமி, நவமி ஆகிய இரண்டு திதிகள் மிகவும் பிரசித்தம். இந்த திதிகளில் எந்தவிதமான சுபகாரியங்கள், புதிய முயற்சிகளை தொடங்குவதில்லை என்பதை மக்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர். இந்த நடைமுறைகூட நமது பழக்க வழக்கங்களில் ஏற்பட்டதுதான்.
மற்ற திதிகள்போல இந்த இரண்டும் நல்ல திதிகளே என்பதை உணர்த்தும் பொருட்டே ராமாவதாரத்தில் மகா விஷ்ணு, நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்த தினத்தை ஸ்ரீராமநவமி என்று கொண்டாடுகிறோம். கிருஷ்ணாவதாரத்தில் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் ஸ்ரீ கண்ணனாக அவதரித்த தினத்தை கோகுலாஷ்டமி என்று கொண்டாடுகிறோம். ‘எல்லாவற்றிலும் நான் உறைகின்றேன்’ என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் நமக்கு உணர்த்தியிருப்பதன் வெளிப்பாடே இது. இப்படி ஒவ்வொரு பண்டிகையிலும் பல சூட்சும கருத்துகள், தத்துவங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.
பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டுக்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சமும், நோக்கமும் ஆகும். அதனால்தான் கிருஷ்ண ஜெயந்தியன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலமிட்டு, மாவிலை தோரணங்களால் அழகுபடுத்துவர். வாசலில் தொடங்கி பூஜை அறை வரை குழந்தையின் கால் தடங்களை அரிசி மாவால் பதிப்பார்கள். ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டுக்குள் தத்தித்தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.
கிருஷ்ணனின் படத்தை அலங்கரித்து, மாலைகளும், மலர்களும் சூடி அவனுக்கு பிடித்தமான வெண்ணெய், இனிப்பு வகைகள், சீடை, முறுக்கு, தேன்குழல், பொங்கல் போன்ற நைவேத்யங்கள் படைத்து அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து பூஜைகள் செய்து வழிபடுவர். அந்த நீல வண்ண கண்ணன் நம் இல்லம் வந்து அருள்புரிய மனதார வேண்டி பிரார்த்தனை செய்கின்றோம். இதைத்தான், சூடிக் கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் தனது திருப்பாவையில் இவ்வாறு பாடியருளியுள்ளார்.
‘மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயை குடல்விளக்கஞ் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூவித்தொழுது
வாயினாற்பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவா னின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்...’
என்று பாடியருளி, விஷ்ணுவை வழிபட்டால் எல்லா விதமான தடைகளும், பிழைகளும் தீயினில்பட்ட தூசாக அழியும் வேண்டும் என்று கூறியுள்ளார்.
பெரும்பாலும் ஆவணி மாதத்தில்தான் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஆடி மாதத்தில் ஒன்றும் ஆவணி மாதத்தில் ஒன்றும் வருகிறது.
இன்று கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது. ஒரு மாதம் கழித்து கிருஷ்ண ஜெயந்தி வருகிறது.
குழந்தை பாக்யம் இல்லாதவர்கள், புதுமண தம்பதியர், கருவுற்றிருக்கும் தாய்மார்கள் தங்களுக்கு புக்தி, யுக்தி, அறிவு ஆற்றல், ஆயுள், ஆரோக்யம் மிக்க சற்புத்திர பாக்யத்தை அருள வேண்டும் என்று அந்த ஆலிலைக் கண்ணனிடம் நெஞ்சுருகி பிரார்த்தனை செய்து கொண்டால் ஜாதகத்தில் உள்ள புத்திர தோஷம், புத்திர தடை போன்றவை நிவர்த்தியாகி சற்புத்திர பாக்கியத்தை பகவான் கிருஷ்ணன் அருள்வார்.
‘ஜோதிட முரசு’ மிதுனம் செல்வம்
Sunday, 5 August 2012
சங்கடஹர சதுர்த்தி
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே.
விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.
ஒவ்வொரு மாதமும் வரும் "சங்கடஹர சதுர்த்தி" நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.
"ஹர" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும்.
ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை கடைப்பிடிக்க துவங்க வேண்டும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை "மகா சங்கடஹர சதுர்த்தி" என்று அழைக்கின்றனர்.
விரதத்தின் பலன்கள்:
இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும்.
விரதம் இருப்பது எப்படி?
சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும்.
மாலை ஆலயத்திற்கு சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக் கொள்ள வேண்டும்.
அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.
விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்ற வேண்டும். சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்குரிய,
"ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி : ப்ரசோதயாத்"
எனும் கணேச காயத்ரீ மந்திரத்தையும், தமிழில் விநாயகர் அகவலையும் பாடி தொந்திக் கணபதியை தியானித்தால் கூடுதல் பலன் உண்டு.
Saturday, 4 August 2012
தினம் ஒரு முட்டை
காலை நேரத்தில் சிற்றுண்டியாக, 2 முட்டையினை சாப்பிடுவதால், நம்முடைய உடலிற்கு 14 கிராம் அதிக சத்துகள் நிரம்பிய புரோட்டின் , 12 கிராம் கொழுப்பு ,1 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 13 விதமான மினரல் & விட்டமின்ஸ் கிடைக்கின்றது.
பொதுவாக ஒரு பெரிய முட்டையில் 80 கலோரிஸ் இருக்கின்றது, இதில் 60 கலோரிஸ் முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கின்றது. மீது 20 கலோரிகள் தான் வெள்ளை கருவில் இருக்கின்றது. அதனால் உடல் பருமனாக இருப்பவர்கள், வயதனவர்கள் வெள்ளை கருவினை மட்டும் சாப்பிடுவது உடலிற்கு நல்லது.
முட்டையின் மஞ்சள் கருவில் அதிக அளவு கொலஸ்ட்ரால் இருக்கின்றது. ஆனாலும் இந்த கொலஸ்ட்ரால் நம்முடைய கொலஸ்ட்ரால் அளவினை அதிகப்படுத்துவதில்லை. ஆனாலும் அளவோடு சாப்பிடுவது நல்லது.
ஒரு நாளைக்கு நமக்கு 300 கொலஸ்ட்ரால் நம்முடைய உடலிற்கு தேவைப்படுகின்றது. ஒரு முட்டையின மஞ்சள் கருவில் சுமார் 275 இருக்கின்றது. தினமும் முட்டையினை சாப்பிடுவதால் இதய நோய் வருவதற்கான வாய்புகள் குறைவாக இருப்பதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கபட்டுள்ளது.
தினமும் காலை நேர உணவாக, இரண்டு முட்டை சாப்பிட்டால் அன்றைய தினம் முழுவதும் சோர்வு இல்லாமல் உடல் இயங்கும்..(முட்டையில் அதிக சத்துகள் இருப்பதால்.) இப்படி தினமும் 2 முட்டையினை சாப்பிடுவதால் உடல் இளைக்கவும் உதவுகின்றது.
முட்டையினை சமைக்கும் பொழுது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்,
முட்டையினை கடையில் இருந்து வாங்கி வந்துவுடன், அதனை ப்ரிஜில் வைப்பது மிகவும் நல்லது.வாங்கிபொழுதோ அல்லது சமைக்கும் முன்போ(எப்படியும் சமைக்கும் பொழுது உடைக்கதான் போகிறோம்-இது அதற்கும் முன்பு-)முட்டை உடைந்து காணபட்டால் அதனை கண்டிப்பாக உபயோகிக்க கூடாது.
வேகவைத்த முட்டையினை ஒரு வாரம் வரை ப்ரிஜில் வைத்து சாப்பிடலாம்.முட்டையின் வெள்ளை கருவினை 8 10 நாட்கள் வரை ப்ரிஜில் வைத்து உபயோகிக்கலாம். மஞ்சள் கருவினை, தண்ணீர் ஊற்றி காற்று புகாத டப்பாகளில் வைத்து ப்ரிஜில் வைத்து 2 3 நாட்களுக்குள் உபயோகிக்கலாம்.
முட்டையினை வேகவைத்த பின், உடனடியாக அதனை குளிர்ந்த தண்ணீருக்கு மாற்றிவிட வேண்டியது மிகவும் நல்லது. மஞ்சள் கருவில் உள்ள சல்பர் சத்து, முட்டையின் வெள்ளை கருவில் இருக்கும் சல்பருடன் சேர்த்து முட்டையின மஞ்சள் கருவினை ஒருவித பச்சைநிறத்திற்கு மாற்றிவிடுகின்றது. ('அது நல்லது அல்ல')
முட்டையினை வேகவைக்கும் பொழுது கவனிக்கவேண்டியது: எக்ஸ்பிரி டேட்டடிற்குயிற்கு ஒரு வாரம் முன்னதாக சமைத்தால், தோல் நீக்குவது மிகவும் சுலபமாக இருக்கும். எக்ஸ்பிரி டேட்டடிற்குயிற்கு 2 &3 வாரம் முன்னதாக சமைத்தால் வேகவைத்த முட்டையில் தோலினை நீக்கிவதில் சிறிது சிரமம் எடுக்கும்.
Thursday, 2 August 2012
விந்தணு குறைபாட்டை தடுக்க நிபுணர்கள் ஆலோசனை
பண்டைய காலங்களில் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்பட்டால் பெண்களுக்கு மட்டுமே குறை இருப்பதாக கருதப்பட்டது. இதனால் குழந்தை பிறக்காததை காரணம் காட்டி பெண்ணை ஒதுக்கி வைத்து விட்டு இரண்டாம் தாரம் கூட ஆண்கள் திருமணம் செய்து கொண்டனர். தற்போது விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக சோதனை செய்யப்பட்டதில் ஆண்களின் விந்தணுக்களில் குறைபாடு இருந்தாலும் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படும் என்று கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சை முறைகளும் வந்து விட்டன. எனவே சரியான அளவில் விந்தணுக்களை அதிகரிக்க உளவியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்களேன்.
நமது கற்பனைக்குக் கூட எட்டாத கடவுளின் அற்புதங்களின் ஒன்று மகப்பேறு. ஆணின் விந்துவும், பெண்ணின் முட்டையும் சேர்ந்தால் கரு உண்டாகும். இந்த சேர்க்கை நிகழாவிட்டால், கருத்தரிப்பு ஏற்படாது. மாதவிடாய் முடிந்த 14 அல்லது 15 நாளில், பெண்ணின் சினைப்பைகளிலிருந்து சினைமுட்டை (Ovum) வெளிபடும். இது ஒரு நாள் தான் உயிரோடு இருக்கும். அதற்குள் உடலுறவு நிகழ்ந்தால் கர்ப்பம் உண்டாகும்.
உடலுறவிற்கு பின் கோடிக்கணக்கான ஆணின் விந்து அணுக்கள் பெண்ணுறுப்பில் விழும். இவை ஆவேசத்துடன் முன்நோக்கி நகர்ந்து கர்பப்பையை நோக்கி நீந்தி ஒடும். ‘ஸ்பீட்’ என்ன தெரியுமா? ஒரு செ.மீ. கடக்க கிட்டத்தட்ட 3.2 நிமிடங்கள் (8 நிமிடங்களில் 1 அங்குலம்) ஆகும். கடக்க வேண்டிய தூரம் (பெண்ணுறுப்பிலிருந்து கர்பப்பையின் தூரம்) 15 லிருந்து 25 செ.மீ. இருக்கும். இவை கர்பப்பையை அடைய நீந்துவதற்கு உதவுவது வழவழப்பான விந்து திரவம். இலக்கை அடையும் முன்பே லட்சக்கணக்கான விந்தணுக்கள் சோர்வடைந்து விழுந்து விடும். வலிமையும், நகரும் துடிப்பும் உடைய விந்தணுக்கள் தான் முட்டையை அடையும். இந்த மிகச் சிறிய (புள்ளி அளவே உள்ள) முட்டையை உயிரணுக்கள் முட்டி, முட்டி மோதும். இவற்றில் சிறந்த ஒரே ஒரு உயிரணு தான் முட்டையின் வெளிச் சவ்வை துளைத்து உள்ளே நுழையும். நுழைந்த உடனே, வேறு அணுக்கள் உள்ளே புகாதபடி சினை முட்டையில் சவ்வுப் பகுதி கதவு போல் மூடிக் கொண்டு விடும்! ஒரே ஒரு விந்தணுக்குத் தான் அனுமதி!
சாதாரணமாக ஒரு ஆணின் ஒரு மில்லி லிட்டர் விந்தில் குறைந்த பட்சம் 4 கோடி விந்தணுக்கள் இருக்க வேண்டும். அதிக பட்சமாக 12 கோடி கூட இருக்கும். இந்த குறைபாடு தான் முக்கியமான பிரச்சனை. ஆண்களின் விந்தணு உற்பத்தியில் குறைபாடு ஏற்படுவதற்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. உடலில் சூடு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை சோதனை செய்து கண்டறியலாம். புற்றுநோய் அறிகுறிகள் இருந்தாலோ, மூளையில் குறைபாடு இருந்தாலோ விந்தணு உற்பத்தி பாதிக்கும். அதேபோல் மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, சரியான உடற்பயிற்சி இன்மை, டெஸ்டோஸ்டிரன் சுரப்பு குறைபாடினாலும் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும்.
முருங்ககாயை நன்கு வேக வைத்து சாப்பிட்டு வந்தால் காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து ஒரு அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும். நெய், மிளகு,உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.
அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும். அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடவேண்டும். பின்னர் ஒரு டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும். அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வரவும். கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர பழைய நிலைமைக்கு வரலாம்.
ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும். காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.
வெள்ளைப்பூண்டு விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும். இதேபோல் தர்பூசணி பழம் சாப்பிடுவதன் மூலம் விந்தணு உற்பத்தி பெருகும் என்று ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. தினசரி ஒருமணிநேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும். இது உடலில் ரத்த ஒட்டத்தின் அளவை அதிகரிக்கிறது. இதனால் டெஸ்டோடிரன் ஹார்மோன் சுரப்பும் அதிகரிக்கும். அதேபோல் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தியும் அதிகரிக்கும். இது விந்தணு உற்பத்தியை அதிகரிக்கிறது.
ஆடி -18
இன்னைக்கு ஆடி 18ங்க!
வருடத்தில் எத்தனையோ விழாக்கள் வந்தாலும், அவற்றில் தனித்துத் தெரிவதும், மிகுந்த பரவசம் கொள்ளச் செய்வதுமான விழா... ஆடிப்பெருக்கு வைபவம்தான். பெரியவர்கள் துவங்கி குழந்தைகள் வரை அனைவரும் கொண்டாடிக் குதூகலிக்கிற அற்புதமான விழா இது!
வருடத்தின் பன்னிரண்டு மாதங்களை உத்தராயன காலம் என்றும், தட்சிணாயன காலம் என்றும் பிரித்து வைத்துள்ளார்கள் சான்றோர்கள். ஆடி மாதத்தைக் கடக மாதம் என்றும் சொல்வார்கள். இந்த மாதத்தில்தான் தட்சிணாயன காலம் துவங்குகிறது.
ஆடி மாதத்தில் துவங்கி மார்கழி மாதம் வரையிலான காலம், தட்சிணாயனம். தை மாதம் துவங்கி ஆனி மாதம் வரையிலான காலம், உத்தராயனம். இது சூரியனின் பாவனா இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வரையறுக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றன சாஸ்திரங்களும் ஞான நூல்களும்.
தட்சிணாயனம் துவங்குகிற ஆடி மாதத்தில், சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும் என்பர். எனவே வேத பாராயணம், மந்திர ஜபங்கள் ஆகியவற்றைச் செய்வதற்கு உகந்த காலம் இது எனப் போற்றப்படுகிறது. தவிர, நம் சுவாசத்துக்குத் தேவையான பிராணவாயு அதிகம் கிடைப்பதும் இந்த மாதத்தில்தான்.
அற்புதமான இந்த ஆடி மாதத்தின் இன்னொரு முக்கியச் சிறப்பு... சக்தி வழிபாட்டுக்கு உரிய மாதம் இது. அதாவது, பெண் தெய்வங்களைக் கொண்டாடி திருவிழாக்கள் எடுத்து, வணங்கி ஆராதிக்கிற அருமையான மாதம். ஸ்ரீதுர்கை, ஸ்ரீகாளி, ஸ்ரீமாரியம்மன் என பெண் தெய்வங்கள் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் பொங்கல் படையலிட்டு, வேப்பிலை சார்த்தி, எலுமிச்சை மாலை அணிவித்து, கூழ் வார்த்து நைவேத்தியம் செய்து, பாலபிஷேகம் செய்து அம்மனை வழிபடுவார்கள், பக்தர்கள்.
ஆடி மாதம் முழுவதும் வழிபட்டு, வணங்குவதற்கு உரிய மாதம் என்றாலும், ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் ரொம்பவே விசேஷம்! குறிப்பாக, ஆடி மாதம் 18-ஆம் நாள், ஆடிப்பெருக்கு என சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.
'நீரின்றி அமையாது உலகு' என்றார்கள் முன்னோர்கள். அதேபோல் 'ஆடிப் பட்டம் தேடி விதை' என, ஆடி மாதத்தில் விதைத்தால் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்றும் வலியுறுத்தினார்கள். விளைச்சலுக்கும் தண்ணீருக்கும் தொடர்பு உண்டு என்பதால், தண்ணீரைப் போற்றி வழிபடுகிற வைபவமாகக் கொண்டாடப்படுகிறது ஆடிப்பெருக்கு.
இந்த நாளில், நதியோரங்களில் குடும்பம் குடும்பமாக வந்திருந்து, விளக்கேற்றி, நதிப் பெண்டிரை வணங்கித் தொழுதால், விவசாயம் தழைப்பதுபோல் வம்சமும் விருத்தியாகும் என்பது ஐதீகம். இந்த நாளில், நதிப்பெண்டிரைத் தொழுதுவிட்டுச் செய்கிற எந்தக் காரியமும் வெற்றியைத் தரும் என்கின்றனர் ஆன்றோர்கள்.
பெண் தெய்வங்களை வழிபடுவதற்கு உகந்த இந்த ஆடி மாதம், பெண்கள் வழிபட்டுப் பலன் பெறுகிற மாதமாகவும் சிறப்புறச் சொல்லப்படுகிறது. கன்னிப்பெண்கள் இந்த நாளில் நதிக்கரையில் வழிபட்டால், அவர்களுக்கு நல்ல கணவன் அமைவார் கள் என்பது நம்பிக்கை. சுமங்கலிகள் நதிக்கரைகளில் அமர்ந்து வழிபட்டால், கணவரின் ஆயுள் கூடும்; மாங்கல்ய பலம் பெருகும் என்பது ஐதீகம்.
தமிழகத்தில், காவிரி ஓடும் ஊர்களில் ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இந்த விழாவைச் சொல்வார்கள். காவிரியைத் தவிர, பெண்ணை மற்றும் பொருநை எனப்படும் தாமிரபரணி நதிகள் ஓடுகிற ஊர்களிலும் ஆடிப்பெருக்கு வைபவம் சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.
ஆடிப்பெருக்கு நாளில், திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள காவிரிக்கரையில் எம்பெருமாள் எழுந்தருள்வார். அம்மா மண்டபப் படித்துறையில் காவிரியை வணங்கிவிட்டு, எம்பெருமாளையும் தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். அன்று மாலையில் புடவை, திருமாங்கல்யம், பழங்கள் மற்றும் சீர்வரிசைப் பொருட்கள் ஆகியவற்றை காவிரிக்குச் சமர்ப்பித்து பூஜைகள் நடைபெறும். இந்தக் காட்சியைத் தரிசித்தால், புண்ணியங்கள் பெருகும் என்பது ஐதீகம்.
அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்கவேண்டும் எனில், அறுபத்தாறு கோடி தீர்த்தங்களுக்கு இணையானதும், தட்சிண கங்கை எனப் போற்றப்படுவதுமான காவிரியில் நீராடினால், சகல பாபங்களும் நீங்கும் என ஸ்ரீராமருக்கு வசிஷ்டர் அறிவுரை சொல்ல... அதன்படி ஒரு ஆடி 18-ஆம் நாளில் காவிரியில் நீராடி, பாபம் நீங்கப் பெற்றார் ஸ்ரீராமர் என்றும் சொல்வார்கள்.
தென் தமிழகத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையிலும், தென்னிந்தியாவின் திரிவேணி சங்கமம் எனப்படும் ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையிலும் ஆடிப்பெருக்கு சிறப்புறக் கொண்டாடப்படும். கூடுதுறை அருகில் உள்ள ஸ்ரீசங்கமேஸ்வரர் கோயில் நடை, அன்று அதிகாலையிலேயே திறக்கப்பட்டு, விசேஷ பூஜைகள் நடைபெறும். அம்பிகைக்கு தேங்காய், பழம், பூ, கருமணி ஆகியவற்றைப் படைத்து ஆராதிப்பார்கள். அப்போது பூஜையில் வைக்கப்பட்ட மஞ்சள் சரடை எடுத்து பெண்கள் தங்கள் கழுத்திலும், ஆண்கள் வலது கை மணிக்கட்டிலும் கட்டிக்கொள்வார்கள். இதனால் வீட்டில் மங்கல காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது ஐதீகம்.
தாமிரபரணியிலும் இதேபோல் வழிபாடுகள் நடைபெறும். அத்துடன், இலையில் சூடமேற்றி, அதனை நதியில் மிதக்க விடுவது வழக்கம்! அதேபோல், வீடுகளில் இருந்து முளைப்பாரி எடுத்து வந்தும் ஆற்றில் விடுகின்றனர். அன்றைய நாளில், கரையில் பூஜைகளைச் செய்துவிட்டு, சித்ரான் னங்களைக் குடும்பம் குடும்பமாக அமர்ந்து சாப்பிட்டுச் செல்வார்கள். ஆடிப்பெருக்கு நாளில் வீட்டில் மாக்கோலமிட்டு, சர்க்கரைப் பொங்கல் படைத்து, அம்பிகையை வழிபடுபவர்களும் உண்டு.
குறிப்பாக, புதுமணத் தம்பதிகள் குடும்பத்துடன் ஆற்றங்கரைக்கு வந்து, திருமணத்தின்போது தாங்கள் அணிந்த மாலையை ஆற்றில் விட்டுவிட்டு, புதுத் தாலிச்சரடு கட்டுகிற சடங்கை அங்கே செய்வார்கள். திருமணத் தடையால் அவதிப்படும் பெண்கள் பனை ஓலையால் செய்யப்பட்ட தோடு, கருகமணி மற்றும் காப்பரிசி வைத்து வணங்குவார்கள்.
சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் ஒகேனக்கல், மேட்டூருக்கு வந்து ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடுகின்றனர். அப்போது, மேட்டுரில் உள்ள அணைக்கட்டு முனுசாமி ஆண்டவருக்கு ஆடு- கோழிகளை பலியிட்டுப் பிரார்த்திக்கின்றனர். திருச்சி கல்லணைப் பகுதியில் புதுமணத் தம்பதிகள் வந்து புனித நீராடி, தாலிச்சரடு மாற்றிக் கட்டிக் கொள்வார்கள்.
வருடத்தில் எத்தனையோ விழாக்கள் வந்தாலும், அவற்றில் தனித்துத் தெரிவதும், மிகுந்த பரவசம் கொள்ளச் செய்வதுமான விழா... ஆடிப்பெருக்கு வைபவம்தான். பெரியவர்கள் துவங்கி குழந்தைகள் வரை அனைவரும் கொண்டாடிக் குதூகலிக்கிற அற்புதமான விழா இது!
வருடத்தின் பன்னிரண்டு மாதங்களை உத்தராயன காலம் என்றும், தட்சிணாயன காலம் என்றும் பிரித்து வைத்துள்ளார்கள் சான்றோர்கள். ஆடி மாதத்தைக் கடக மாதம் என்றும் சொல்வார்கள். இந்த மாதத்தில்தான் தட்சிணாயன காலம் துவங்குகிறது.
ஆடி மாதத்தில் துவங்கி மார்கழி மாதம் வரையிலான காலம், தட்சிணாயனம். தை மாதம் துவங்கி ஆனி மாதம் வரையிலான காலம், உத்தராயனம். இது சூரியனின் பாவனா இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வரையறுக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றன சாஸ்திரங்களும் ஞான நூல்களும்.
தட்சிணாயனம் துவங்குகிற ஆடி மாதத்தில், சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும் என்பர். எனவே வேத பாராயணம், மந்திர ஜபங்கள் ஆகியவற்றைச் செய்வதற்கு உகந்த காலம் இது எனப் போற்றப்படுகிறது. தவிர, நம் சுவாசத்துக்குத் தேவையான பிராணவாயு அதிகம் கிடைப்பதும் இந்த மாதத்தில்தான்.
அற்புதமான இந்த ஆடி மாதத்தின் இன்னொரு முக்கியச் சிறப்பு... சக்தி வழிபாட்டுக்கு உரிய மாதம் இது. அதாவது, பெண் தெய்வங்களைக் கொண்டாடி திருவிழாக்கள் எடுத்து, வணங்கி ஆராதிக்கிற அருமையான மாதம். ஸ்ரீதுர்கை, ஸ்ரீகாளி, ஸ்ரீமாரியம்மன் என பெண் தெய்வங்கள் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் பொங்கல் படையலிட்டு, வேப்பிலை சார்த்தி, எலுமிச்சை மாலை அணிவித்து, கூழ் வார்த்து நைவேத்தியம் செய்து, பாலபிஷேகம் செய்து அம்மனை வழிபடுவார்கள், பக்தர்கள்.
ஆடி மாதம் முழுவதும் வழிபட்டு, வணங்குவதற்கு உரிய மாதம் என்றாலும், ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் ரொம்பவே விசேஷம்! குறிப்பாக, ஆடி மாதம் 18-ஆம் நாள், ஆடிப்பெருக்கு என சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.
'நீரின்றி அமையாது உலகு' என்றார்கள் முன்னோர்கள். அதேபோல் 'ஆடிப் பட்டம் தேடி விதை' என, ஆடி மாதத்தில் விதைத்தால் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்றும் வலியுறுத்தினார்கள். விளைச்சலுக்கும் தண்ணீருக்கும் தொடர்பு உண்டு என்பதால், தண்ணீரைப் போற்றி வழிபடுகிற வைபவமாகக் கொண்டாடப்படுகிறது ஆடிப்பெருக்கு.
இந்த நாளில், நதியோரங்களில் குடும்பம் குடும்பமாக வந்திருந்து, விளக்கேற்றி, நதிப் பெண்டிரை வணங்கித் தொழுதால், விவசாயம் தழைப்பதுபோல் வம்சமும் விருத்தியாகும் என்பது ஐதீகம். இந்த நாளில், நதிப்பெண்டிரைத் தொழுதுவிட்டுச் செய்கிற எந்தக் காரியமும் வெற்றியைத் தரும் என்கின்றனர் ஆன்றோர்கள்.
பெண் தெய்வங்களை வழிபடுவதற்கு உகந்த இந்த ஆடி மாதம், பெண்கள் வழிபட்டுப் பலன் பெறுகிற மாதமாகவும் சிறப்புறச் சொல்லப்படுகிறது. கன்னிப்பெண்கள் இந்த நாளில் நதிக்கரையில் வழிபட்டால், அவர்களுக்கு நல்ல கணவன் அமைவார் கள் என்பது நம்பிக்கை. சுமங்கலிகள் நதிக்கரைகளில் அமர்ந்து வழிபட்டால், கணவரின் ஆயுள் கூடும்; மாங்கல்ய பலம் பெருகும் என்பது ஐதீகம்.
தமிழகத்தில், காவிரி ஓடும் ஊர்களில் ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இந்த விழாவைச் சொல்வார்கள். காவிரியைத் தவிர, பெண்ணை மற்றும் பொருநை எனப்படும் தாமிரபரணி நதிகள் ஓடுகிற ஊர்களிலும் ஆடிப்பெருக்கு வைபவம் சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.
ஆடிப்பெருக்கு நாளில், திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள காவிரிக்கரையில் எம்பெருமாள் எழுந்தருள்வார். அம்மா மண்டபப் படித்துறையில் காவிரியை வணங்கிவிட்டு, எம்பெருமாளையும் தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். அன்று மாலையில் புடவை, திருமாங்கல்யம், பழங்கள் மற்றும் சீர்வரிசைப் பொருட்கள் ஆகியவற்றை காவிரிக்குச் சமர்ப்பித்து பூஜைகள் நடைபெறும். இந்தக் காட்சியைத் தரிசித்தால், புண்ணியங்கள் பெருகும் என்பது ஐதீகம்.
அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்கவேண்டும் எனில், அறுபத்தாறு கோடி தீர்த்தங்களுக்கு இணையானதும், தட்சிண கங்கை எனப் போற்றப்படுவதுமான காவிரியில் நீராடினால், சகல பாபங்களும் நீங்கும் என ஸ்ரீராமருக்கு வசிஷ்டர் அறிவுரை சொல்ல... அதன்படி ஒரு ஆடி 18-ஆம் நாளில் காவிரியில் நீராடி, பாபம் நீங்கப் பெற்றார் ஸ்ரீராமர் என்றும் சொல்வார்கள்.
தென் தமிழகத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையிலும், தென்னிந்தியாவின் திரிவேணி சங்கமம் எனப்படும் ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையிலும் ஆடிப்பெருக்கு சிறப்புறக் கொண்டாடப்படும். கூடுதுறை அருகில் உள்ள ஸ்ரீசங்கமேஸ்வரர் கோயில் நடை, அன்று அதிகாலையிலேயே திறக்கப்பட்டு, விசேஷ பூஜைகள் நடைபெறும். அம்பிகைக்கு தேங்காய், பழம், பூ, கருமணி ஆகியவற்றைப் படைத்து ஆராதிப்பார்கள். அப்போது பூஜையில் வைக்கப்பட்ட மஞ்சள் சரடை எடுத்து பெண்கள் தங்கள் கழுத்திலும், ஆண்கள் வலது கை மணிக்கட்டிலும் கட்டிக்கொள்வார்கள். இதனால் வீட்டில் மங்கல காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது ஐதீகம்.
தாமிரபரணியிலும் இதேபோல் வழிபாடுகள் நடைபெறும். அத்துடன், இலையில் சூடமேற்றி, அதனை நதியில் மிதக்க விடுவது வழக்கம்! அதேபோல், வீடுகளில் இருந்து முளைப்பாரி எடுத்து வந்தும் ஆற்றில் விடுகின்றனர். அன்றைய நாளில், கரையில் பூஜைகளைச் செய்துவிட்டு, சித்ரான் னங்களைக் குடும்பம் குடும்பமாக அமர்ந்து சாப்பிட்டுச் செல்வார்கள். ஆடிப்பெருக்கு நாளில் வீட்டில் மாக்கோலமிட்டு, சர்க்கரைப் பொங்கல் படைத்து, அம்பிகையை வழிபடுபவர்களும் உண்டு.
குறிப்பாக, புதுமணத் தம்பதிகள் குடும்பத்துடன் ஆற்றங்கரைக்கு வந்து, திருமணத்தின்போது தாங்கள் அணிந்த மாலையை ஆற்றில் விட்டுவிட்டு, புதுத் தாலிச்சரடு கட்டுகிற சடங்கை அங்கே செய்வார்கள். திருமணத் தடையால் அவதிப்படும் பெண்கள் பனை ஓலையால் செய்யப்பட்ட தோடு, கருகமணி மற்றும் காப்பரிசி வைத்து வணங்குவார்கள்.
சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் ஒகேனக்கல், மேட்டூருக்கு வந்து ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடுகின்றனர். அப்போது, மேட்டுரில் உள்ள அணைக்கட்டு முனுசாமி ஆண்டவருக்கு ஆடு- கோழிகளை பலியிட்டுப் பிரார்த்திக்கின்றனர். திருச்சி கல்லணைப் பகுதியில் புதுமணத் தம்பதிகள் வந்து புனித நீராடி, தாலிச்சரடு மாற்றிக் கட்டிக் கொள்வார்கள்.
- பாரதப்போர் ஆடி 1 ஆரம்பிச்சு, ஆடி 18 முடிஞ்சதாவும் சொல்லுவாங்க. அதுக்கும் ஒரு கொண்டாட்டம் இருக்கும்.
- காவேரி, செந்தண்ணியா ஓடும். இந்த சமயத்துல வயலடிச்சு நெல் விதைக்க ஆரம்பிப்போம், அதுக்கும் ஒரு கொண்டாட்டம்.
- பள்ளிகூடம் விடுமுறை வேறயா அதுவே ஒரு கொண்டாட்டம்.
- புதுசா கல்யாணம் ஆன புருசன்மார்ங்க எல்லாம் மாமியார் வீட்ல இருந்து பொண்டாட்டிய கூட்டிட்டு வர சந்தோசம்.
Thursday, 12 July 2012
துளசி இலையின் மகிமை
துளசி (Ocimum sanctum) மூலிகைகளின் அரசியாக போற்றப் படுகிறது. துளசியை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பலரது வீடுகளின் கொல்லைப் புறத்தில், துளசிமாடம் அமைந்துள்ளதை இன்றுகூட நாம் காணலாம்.
துளசியானது இடியைத் தாங்கும் சக்தி கொண்டது என அறிவியல் அறிஞர்கள் அண்மையில் கண்டறிந்துள்ளனர். இதனால் தானோ என்னவோ வீடுகளில் துளசி வளர்த்திருப்பார்கள் என தோன்றுகிறது.
துளசியின் மணம் உடலுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக் கூடியது.
இதற்கு அரி, இராமதுளசி, கிருஷ்ண துளசி, திருத்துளாய், துளவு, குல்லை, வனம், விருத்தம், துழாய், மாலலங்கர் என பல பெயர்கள் உண்டு.
துளசி இந்தியா முழுவதும் காணப்படும் செடி வகையாகும். இதில் நற்றுளசி, செந்துளசி, நாய்த்துளசி, நிலத்துளசி, கல்துளசி, முள்துளசி, கருந்துளசி என பல வகைகள் உள்ளன.
துளசியை பொதுவாக தெய்வீக மூலிகை என்றே அழைப்பார்கள். கற்ப மூலிகைகளில் இதற்கு தனிச்சிறப்பு உண்டு. இந்து மதத்தினர், இலட்சுமி தேவியின் அம்சமாகவே எண்ணி இதனை வழிபடுகின்றனர்.
துளசியின் பயன்கள்
· இருதயம், ரத்த நாளங்கள், கல்லீரல், நுரையீரல் ஆகியவற்றை பலப்படுத்தும் தன்மையும் ரத்த ஓட்டத்தை சீராக்கும் தன்மையும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீர்படுத்தும் தன்மையையும் கொண்டது.
· துளசி உடல் சூட்டை சீரான நிலையில் பாதுகாக்கிறது.
· நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது.
· மன அழுத்தத்தைப் போக்கும்தன்மை கொண்டது.
· உடலுக்கு பலத்தைக் கொடுக்கிறது.
· இருமல் மற்றும் சுவாச நோய்களுக்கு அரு மருந்தாக பயன்படுகிறது.
· கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொண்டது.
· ஜூரத்தைக் குறைக்கும் குணம் கொண்டது.
· வயிற்றுப் புண், வாய்ப்புண்களை குணப் படுத்தும்.
துளசியை கற்ப முறைப்படி தினமும் சாப்பிட்டு வந்தால் நோயில்லா பெருவாழ்வு வாழலாம்.
குழந்தைகளுக்கான மார்புச்சளி நீங்க
துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் கற்பூரவல்லி சாறு கலந்து சூடாக்கி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு உண்டாகும் மார்புச்சளி, மூச்சு விட முடியாமை, சளியினால் மூச்சுத்திணறல் போன்றவை நீங்கும். மார்புச்சளி வெளியேறும்.
துளசிச் சாறுடன் எலுமிச்சை சாறு சம அளவு சேர்த்து அதனுடன் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்வு நீங்கி உடல் புத்துணர்வடையும்.
பெண்களுக்கு
துளசியிலை, வில்வ இலை, வெற்றிலை சம அளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து அதனுடன் சம அளவு விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு காய்ச்சி ஆறியபின் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, தினமும் காலையில் 1 தேக்கரண்டி எடுத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) அருந்தி வந்தால் பெண்களுக்கு உண்டாகும் பெரும்பாடு (இரத்தப் போக்கு) குணமாகும்.
ரத்த அழுத்தம் குறைய
இரத்த அழுத்தம் உள்ளவர்கள் துளசி இலை, முற்றிய முருங்கை இலை சம அளவு எடுத்து இடித்து 50 மி.லி அளவு சாறில் 2 சிட்டிகை சீரகப்பொடி சேர்த்து காலை, மாலை என இருவேளை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 1 மண்டலம் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் குறையும். இது சாப்பிடும் காலங்களில், உப்பு, காரம், புளியைக் குறைப்பது அவசியம்.
உடல் எடை குறைய
துளசி இலைச்சாறுடன் எலுமிச்சம் பழம் சேர்த்து சிறிது சூடாக்கி அதனுடன் தேன் கலந்து, உணவுக்குப்பின் உட்கொண்டால் உடல் எடை குறையும்.
குப்பைமேனி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி, தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த சூரணத்தை தினமும் இருவேளை, வேளைக்கு இரண்டு சிட்டிகை என எடுத்து நெய்யில் குழைத்து தொடர்ந்து உட்கொண்டால் மூலச்சூட்டினால் ஏற்படும் கருப்பு நிறம் மாறும்.
அம்மான் பச்சரிசியுடன், துளசி இலை சம அளவு எடுத்து நன்கு அரைத்து பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும்.
துளசி இலை – 9 எண்ணிக்கை
கடுக்காய் தோல் – 5 கிராம்
கீழாநெல்லி – 10 கிராம்
ஓமம் -5 கிராம்
மிளகு – 3
எடுத்து மைபோல் அரைத்து மோரில் கலந்து தினமும் மூன்று வேளை கொடுத்துவந்தால், சாம்பல், மண் தின்னும் குழந்தைகள் எளிதில் அவற்றை ஒதுக்கும்.
தொண்டைக்கம்மல், வலி நீங்க
தினமும் துளசியிலையை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக மென்று சாறு இறக்கினால், சளி, தொண்டைக்கட்டு நீங்கும். உடலில் உள்ள நச்சுத்தன்மையும் நீக்கும்.
10 துளசியிலை எடுத்து அதனுடன் 5 மிளகு சேர்த்து நசுக்கி 2 டம்ளர் நீர்விட்டு அரை டம்ளராக சுண்டக் காய்ச்சி கஷாயம் செய்து சூடாக அருந்தி, பிறகு சிறிது எலுமிச்சை சாறு அருந்திவிட்டு நல்ல கம்பளி கொண்டு உடல் முழுவதும் போர்த்தி விட்டால் மலேரியா காய்ச்சல் படிப்படியாக குறையும்.
சிறுநீரகக் கல் நீங்க
துளசி இலையை ஒரு செப்புப் பாத்திரத்தில் நீர்விட்டு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை எடுத்து இலையோடு சேர்த்து அருந்தி வந்தால் சிறுநீரகக் கல் படிப்படியாக கரையும். இவ்வாறு ஒரு மண்டலம் அருந்துவது நல்லது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற வேதிப் பொருட்கள், விஷநீர்கள் சிறுநீர் வழியாக வெளியேறி ரத்தத்தை சுத்தமாக்கும்.
சிறு சிறு பூச்சிக் கடிகளின் விஷம் நீங்க
கண்ணுக்குத் தெரியாத சிறு சிறு பூச்சிக் கடிகளால் சிலருக்கு உடலில் அலர்ஜி உண்டாகி சருமம் பாதிக்கப்படும். அல்லது வேறு வகைகளில் பாதிப்பு ஏற்படும். இந்த பூச்சிகளின் விஷத்தன்மை நீங்க துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் சம அளவு தும்பைச் சாறு கலந்து ஒரு வாரம் அருந்தி வந்தால் விஷம் எளிதில் இறங்கும்.
வாய்ப்புண் , வாய் நாற்றம் நீங்க
வயிற்றில் புண்கள் இருந்தால் வாயிலும் புண்கள் உண்டாகும். இதனால் வாய் நாற்றம் வீசும். வாய்ப்புண் ஆற துளசி இலையை பறித்து நீர்விட்டு அலசி, வாயில் வைத்து மென்று மெல்ல மெல்ல சாறினை உள்ளிறக்கினால், வாய்ப்புண் வயிற்றுப்புண் ஆறும். வாய் நாற்றமும் நீங்கும்.
மன அழுத்தம் நீங்க
மன அழுத்தத்தைப் போக்கும் குணம் துளசிக்கு உண்டு. துளசி இலையை நன்கு மைபோல் அரைத்து அதனுடன் வில்வ இலை சாறு சேர்த்து லேசாக சூடாக்கி அருந்தினால் மன அழுத்தம் நீங்கும்.
பற்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் தீர
துளசி இலை, புதினா இரண்டையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் கிராம்புப் பொடி சேர்த்து தினமும் பல் துலக்கி வந்தால், பற்களின் சொத்தை, பல் ஈறு வீக்கம் மேலும் பற்கள் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும்.
தலைவலி தீர
ஒரு கைப்பிடி துளசி இலை மூன்று மிளகு, 1 துண்டு இஞ்சி எடுத்து நன்கு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி நீங்கும்.
கண்நோய்கள் தீர
துளசி இலை ஊறிய நீரை 1 மண்டலம் அருந்தி வந்தால் முக்குற்றங்களில் ஒன்றான பித்த அதிகரிப்பு குறையும். இதனால் கண் நரம்புகளின் சூடு குறைந்து நரம்புகள் பலப்படும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாது.
சரும நோய்கள் நீங்க
தேமல், படை உள்ள இடங்களில் துளசியும் உப்பும் சேர்த்து அரைத்து பூசி வந்தால் சரும நோய்கள் நீங்கும்.
துளசி இலைக்கு உள்ளத்தைத் தூய்மையாக்கும் குணமும் உண்டு.
ref:- http://senthilvayal.wordpress.com
Subscribe to:
Posts (Atom)